யாதாயினும் ஒரு விடயத்தை விளக்கியும் விரித்தும் ஒழுங்கு முறையில் எழுதுவதற்குரிய அமைப்பே பந்தியாகும். ஒரு விடயத்தை அடிப்படையாகக் கொண்டு முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியதாக விளக்கியும் விரித்தும் பந்தி எழுதுப்படும்.
பந்தியின் உள்ளடங்க வேண்டியவை
அ. ஒருமைப்பாடு –
- பந்தியின் உயிர்நாடியாக விளங்குகின்றது.
- ஒவ்வொரு வாக்கியமும் ஓர் எண்ணம் குறிப்பது போல் ஒவ்வொரு பந்தியும் ஒரு கருத்தமைவினைக் குறிக்கும்.
- பந்தியில் இடம்பெறும் துணைவாக்கியங்கள் அலகு வாக்கியங்களுடன் (முதன்மை வாக்கியத்துடன்) தொடர்புடையதாக அமைதல் வேண்டும்.
ஆ. அலகு வாக்கியம் – - ஒரு பந்தியின் அடிப்பொருளை உணர்த்தும் வாக்கியமே அலகு வாக்கியம் எனப்படும்.
- ஒரு பந்தியின் முதல் வாக்கியமே அவ்வலகின் அடிப்பொருளை உணர்த்தும்.
- அப்பந்தியின் ஏனைய வாக்கியங்கள் (துணைவாக்கியங்கள்) அலகு வாக்கியத்தின் பொருளை விளக்கமாக கூறும்.
இ) துணைவாக்கியங்கள் –
01) அலகு வாக்கியத்தை விபரிக்கும் வகையில் துணைவாக்கியங்கள் அமையும்.
02) ஒரு பந்தியில் மூன்று அல்லது நான்கு துணைவாக்கியங்கள் இருக்கலாம்.
03) துணைவாக்கியங்கள் ஒவ்வொன்றும் அலகு வாக்கியத்தை விபரிக்கும் வகையில் அமைய வேண்டும்.
இ. தர்;க்க ஒழுங்கு – - செய்திகளை ஒழுங்கு நிரலில் கூறுவது தர்க்க ஒழுங்கு எனப்படும்.
- ஒரு பந்தியில் இடம்பெறும் ஒவ்வொரு வாக்கியமும் அப்பந்தியினது அலகு வாக்கியத்தோடு கொள்கையளவில் தொடர்புடையதாக காரண காரியத் தொடர்புடையதாக ஒழுங்கு நிரலில் எழுதப்பட வேண்டும்.
ஈ. நன்;முடிப்பு வாக்கியம் – - ஒரு பந்தியில் அலகு வாக்கியத்தில் எடுத்துக்கொண்ட விடயத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் இறுதி வாக்கியம் நன்முடிப்பு வாக்கியம் எனப்படும்.
- அலகு வாக்கியம் வாசகனுக்கு ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தும், நன்முடிப்பு வாக்கியம் அவ்வபிப்பிராயம் குறித்த ஒரு விளைவைத் தரும்
சிறந்த பந்தியொன்றில் தவிர்க்கப்பட வேண்டியவை.
• கூறியது கூறல்.
• தேவைக்கு அதிகமாக எழுதுதல்.
• முன்னுக்கு பின் முரணாக எழுதுதல்.
• பொருத்தமற்ற விடயங்களை எழுதுதல்.
• தெளிவற்ற விதத்தில் எழுதுதல்.
பந்தி எழுதும் படிமுறை
• குறித்த விடயம் பற்றிய குறிப்புகளை வாக்கியங்களாக எழுதுதல்.
• வாக்கியங்களை ஒழுங்குபடுத்தல்.
• ஒழுங்கமைத்த முறைக்கேற்ப வாக்கியங்களை இணைத்தல்.
• பந்தியை அமைத்தல்.
உதாரணம்
பந்தி 01
• இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதைக்கு வசந்த காலம். இந்தக் காலத்தில் வடிவத்திலும் வண்ணத்திலும், வாசத்திலும் வகை வகையான புதிய கவிதைப் பூக்கள் தமிழில் மலர்ந்தன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்த வசந்தத்தைப் பாடும் குயிலாகப் பாரதியின் குரல் ஒலித்தது. அவனே இந்த வசந்தத்தின் முதல் பூப்பாகவும், அதைப்பாடியே முதல் குயிலாகவும் இருந்தான். அரசர்களின் அந்தப்புரங்களில் ஆடிக் கொண்டிருந்த கவிதையை அவன் தான் சமூகத்தின் சேவகியாக்கினான். புலவர்களின் யாப்புப் பெட்டிக்குள் சிறைப்பட்டுக்கிடந்த கவிதையை அவன்தான் மக்களின் பொதுவுடைமை ஆக்கினான்.
பந்தி 2
• சொற்களுக்குரிய நேர்ப்பொருளை உணர்த்தாது அச்சொற்களின் ஆற்றாலால் ஒரு குறித்த பொருளில் வரும் தொடர் மரபுத்தொடர் எனப்பெயர் பெறும். இதனை சுருக்கமாகவும் சுவையாகவும் கூறுவதில் மரபுத்தொடர்கள் பெரிதும் உதவுகின்றன. பேச்சுவழக்கிலும் உரைநடை, செய்யுள் ஆகியவைகளிலும் மரபுத்தொடர்கள் பெரிதும் வழங்கி வருகின்றன. பிறரின் கருத்துக்களைச் செவ்வனே அறிந்து கொள்ளவும் தம் கருத்தைச் செவ்வனே பிறருக்குக் கூறவும் வேண்டுமாயின் மரபுத்தொடர்களின் பொருளையும் பிரயோகங்களையும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.
பந்தி 03
• வானியல் ஆராய்ச்சிகள் விஞ்ஞானச் சாதனைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சிகளாக இன்று விளங்குகின்றன. சந்திர மண்டலத்தினை கண்டு தெளிந்த விஞ்ஞானிகள், செவ்வாயில் காலடிப்பதிக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். சூரியனிலிருந்து துண்டுகள் ஏதாவது வெடித்து விழுந்தால் அத்துண்டுகள் பூமியைத் தாக்கத்திருப்பதற்காக பூமியையே புரட்டி நகர்த்தும் அளவிற்கு விஞ்ஞான ஆய்வுகள் வளர்ந்து விட்டதைக் கண்டு அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை.

FOUNDER DIRECTOR
Agaram Dhines
About Me
Name: Th. Dineshkumar (Agaram Dhines)
Profession: Tamil Language Teacher | YouTuber | Online Tutor
I am a passionate and experienced Tamil language and literature teacher with over 8 years of teaching experience. I currently serve as a Sri Lanka Teacher Service (SLTS II/2) educator, guiding students from Grades 6 to 13.
Academic Qualifications:
- Bachelor of Arts (Hons) in Tamil & Tamil Language Teaching
- Diploma in Artificial Intelligence and Graphic Designing
Professional Highlights:
- I run a popular educational YouTube channel named “Agaram Dhines”, where I create and share free Tamil lessons.
- I teach students not only from Sri Lanka, but also Tamil language enthusiasts from around the world.
- I offer personalized online classes, supporting both school curriculum and Tamil language skill development.
My Services Include:
- Curriculum-based teaching for Grades 6 to 13
- Special focus on literature, grammar, and writing skills
- Model exams, practice question papers, and video-based lessons
- Speaking and writing skill development for non-native Tamil learners
